Saturday, October 19, 2024

சூர்யா 45 கதை முதலில் இந்த நடிகைகாக எழுதப்பட்ட கதையா? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் இந்த நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது திரைப்படத்தை நிறைவு செய்துள்ளார்.

அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளார் என்பதும், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பது என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்த்தவுடன், இப்படம் ஒரு கிராமத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால், கிராமத்து பின்னணியில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக இப்படத்திற்கு ‘சூர்யா 45’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இப்படத்தின் கதை முதலில் நடிகை திரிஷாவுக்காக எழுதப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், படக்குழு இந்தக் கதையை சூர்யாவுக்கு ஏற்றபடியாக மாற்றியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News