நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரியப்போவதாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுவும் தொடர்ந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஜெயம் ரவி தற்போதைய நிலையில் மும்பை சென்றிருப்பதாகவும், அங்கு தனது புதிய அலுவகம் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அதோடு, இந்தி திரையுலகில் சில தயாரிப்பு நிறுவனங்களுடன், இந்தி படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படம் இந்த தீபாவளி அன்று வெளியிடப்படவுள்ளது.