Thursday, September 26, 2024

வேள்பாரி நாவலை சூர்யா மற்றும் விக்ரமை வைத்து இயக்குகிறாரா ஷங்கர்? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு, ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் “கேம் சேஞ்சர்” படத்தை இயக்கி வருகிறார். அதன்பிறகு, “இந்தியன் 3” படத்தின் பணிகளை தொடங்கி, அந்த படத்தை முடித்ததும், ஷங்கர் “வேள்பாரி” நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார்.

அந்த நாவலின் உரிமையை ஷங்கர் பெற்றுள்ளார், மேலும் சமீபத்தில் தான் எக்ஸ் பக்கத்தில், சில திரைப்படங்கள் “வேள்பாரி” நாவலின் காட்சிகளை பயன்படுத்தி வருவதாக தெரிவித்து, அவ்வாறு செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

இதனால், “வேள்பாரி” நாவலை அடுத்ததாக உடனடியாக திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் விக்ரம், சூர்யா ஆகியோரை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்காக, ஷங்கர் தனது முன் படங்களை விட பெரிய அளவில் இந்த “வேள்பாரி” நாவலை பான் இந்தியா அளவிலான ஒரு சரித்திர படமாக இயக்க திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News