ரஜனிகாந்த்-ஐ வைத்து இயக்குனர் ஞானவேல் வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார் இப்படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நான் பல படங்களை பாராட்டியுள்ளேன். ஜெய்பீம் படத்தை பாராட்டவில்லை. அப்போது ஞானவேல் அவர்கள் பத்திரிகையாளர் என கேள்விப்பட்டேன். மீண்டும் போய் மற்றொரு முறை ஜெய் பீம் படத்தை பார்த்தேன் திரைப்படம் நன்றாகவே இருந்தது. இதனைத்தொடர்ந்து முதலில் சௌந்தர்யா அவர்கள் ஞானவேல் ஒரு கதையின் ஒன்லைன் சொன்னதாக சொன்னார்கள். நான் இயக்குனரிடம் ‘நீங்கள் மெசேஜ் சொல்லுவீர்கள் அது நமக்கு செட் ஆகாது. மக்கள் கொண்டாட கூடிய கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என்றேன்.
அவர் 10 நாட்கள் டைம் கேட்டு வெறும் 2 நாளில் மீண்டும் கால் செய்தார். நான் கமர்ஷியலாக படம் பண்ணுகிறேன். ஆனால், இயக்குனர்கள் நெல்சன், லோகேஷ் அவர்களை போல் இல்லாமல் ரசிகர்கள் உங்களை வேறுவிதமாக பார்க்கும் வகையில் காட்டுகிறேன் என்றார். அப்போது அதுதான் எனக்கு வேண்டும். அப்படி வேண்டும் என்றால் நான் நெல்சன், லோகேஷ் அவர்களிடமே சென்றிருப்பேன் என்றேன்.
தற்போதைய காலகட்டத்தில் நல்ல இயக்குநர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. வெற்றிமாறன் எல்லாம் இருக்கிறார்கள்.முன்பு கதை, திரைக்கதை இயக்கம் என தனி தனியாக இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் ஒரே இடத்தில் தான். இப்போது மிகப்பெரிய ஹீரோ மட்டும் இருந்தால் அந்தப் படம் வெற்றி அடையாது.சிறந்த தயாரிப்பு நிறுவனமும் வரவேண்டும் அப்போதான் அந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடும்.