மலையாளத்தில் வெளியான ‘நேரம்’, ‘பிரேமம்’ போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு, ‘அவியல்’, ‘கோல்ட்’ போன்ற படங்களை இயக்கிய அவர் தற்போது சாண்டி மாஸ்டரை வைத்து ‘கிபிட்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ரஜினி, அஜித் ஆகிய இருவரையும் இணைத்து இயக்குவதற்கான ஒரு கதையை தயார் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஒருவேளை அவர்கள் அந்த கதையில் நடிக்க மறுத்தால், கமல், சிம்பு ஆகியோரை வைத்து அந்த படத்தை இயக்க முயற்சி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
