Saturday, September 14, 2024

பாலிவுட்டில் நடிக்க இவர்தான் காரணம்… தனது பாலிவுட் வாய்ப்பை பற்றி பேசிய ஆடுகளம் கதாநாயகி…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் தற்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸி, ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார். இவர், கடந்த மார்ச் 23-ம் தேதி தனது நீண்ட நாள் காதலனான பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அக்‌ஷய் குமாருடன் ‘கெல் கெல் மேய்ன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் முடாஸர் அஜீஸ் இயக்கியுள்ளார்.ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்திய பேட்டியில் பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், நடிகை பிரீத்தி ஜிந்தாவின் சாயல் இருந்ததால் என்னை பாலிவுட்டில் நடிக்க அழைத்தார்கள். அவரின் புதிய பதிப்பாக என்னை நினைத்தார்கள். அதனால் இந்தி வாய்ப்புகள் கிடைத்தன. பிரீத்தி ஜிந்தாவை விவேகமான மற்றும் புத்திசாலித்தனமான நடிகையாக பார்க்கிறேன். அவரின் சாயலால் பாலிவுட் சினிமாவுக்கு வந்ததால், அவர் பெயரை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அவரைப் போலவே இருக்க கடினமாக முயற்சித்தேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News