Tuesday, September 17, 2024

விடாமல் பின்தொடர்ந்து வந்து ஃபோட்டோ எடுத்த ரசிகர்கள்… அட்வைஸ் செய்த டாப்ஸி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை டாப்ஸி தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட டாப்ஸி, மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜும்மாடி நாதம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 2011-ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் ‘வந்தான் வென்றான்’, ‘காஞ்சனா 2’, ‘வை ராஜா வை’, ‘கேம் ஓவர்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அக்‌ஷய்குமார் நடித்த ‘பேபி’ படம் டாப்ஸிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்த ‘குயின்’ திரைப்படம் இவருக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதன் பின்னர் பெண்களை மையமாகக் கொண்ட படங்களில் அதிகம் கவனம் செலுத்தியதால், பெரிய ஹீரோக்கள் இவரை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘டன்கி’ படத்தில் நடித்தார் அந்தப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.நேற்று முன் தினம் டாப்ஸி தனது தோழியுடன் ஆட்டோவில் செல்லும் போது, சில ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்தனர்.

அப்போது, ஆட்டோவில் இருந்தபோதும் அவர்களை விடாமல் தொடர்வதை பார்த்து, விபத்தில் சிக்கிடப் போகிறார்கள் என எச்சரித்துக் கொண்டே டாப்ஸி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.டாப்ஸி ‘ஹோ லட்கி ஹாய் கஹான்’, ‘ஹசீன் தில்ருபா – 2’ மற்றும் ‘கெல் கெல் மெயின்’ போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். தனது அடுத்த படம் விரைவில் வெளியாகவுள்ளதால், அதன் புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளார் டாப்ஸி.

- Advertisement -

Read more

Local News