Tuesday, September 17, 2024

உச்சக்கட்ட கோபத்தில் திரிஷா… செய்தியாளர்களின் கில்லி ரீ ரிலீஸ் குறித்த கேள்விக்கு ‘நோ’ பதில் …

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடகி சுசித்ரா தொடர்ந்து பல பிரபலங்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிவருகிறார். இந்நிலையில் திரிஷாவை பற்றியும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சுசித்ரா பேச்சுக்கு திரிஷா தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக யூடியூப் சேனல்களில் திரிஷா மற்றும் மற்ற முன்னணி நடிகர்களைப் பற்றி சுசித்ரா தொடர்ந்து மோசமாகப் பேசி வருகிறார்.

இந்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், விமான நிலையத்தில் திரிஷாவை சந்தித்த செய்தியாளர்கள், கில்லி ரீ ரிலீஸ் வெற்றி அடைந்தது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர். இதற்கு பதில் அளிக்காமல், திரிஷா சீக்கிரமாக அங்கிருந்து கிளம்பி விட்டார் எனவும் அவர் மிகவும் கோபமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லியோ படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கும் திரிஷா, அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஐடென்டிட்டி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள பிரம்மாண்ட விஸ்வம்பரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், தளபதி 69 படத்தில் திரிஷா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கில்லி படத்தின் ரீ ரிலீஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவு செய்த திரிஷா, அதுபற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்றது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News