ரேஷ்மா முரளிதரன் சின்ன திரையில் பூவே பூச்சூடவா, அபி டெய்லர், கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரேஷ்மா, சமீபத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது தங்க மீன்கள் தொடரிலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிக்கும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதால், சமூக வலைதளங்களில் ரேஷ்மாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்புத் திறமையால் பாத்திரத்துக்கு வலு சேர்க்கும் ரேஷ்மாவின் புதிய தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
