யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கிய “டாக்சிக்” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி வெளியானது. திரையரங்குகளில் வெளியானது முதல் இதுவரை இப்படம் ரூ.328 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், ஆங்கில மொழியில் சமீபத்தில் வெளியான இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. ஆங்கில பதிப்பு வெறும் ரூ.1.40 லட்சம் மட்டுமே வசூலித்திருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் யஷ் தனது அடுத்த முக்கியமான படைப்பான “ராமாயணா”வில் நடிப்பதுடன் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார். நமித் மல்கோத்ராவுடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தையும் ஏற்றுள்ளார். தற்போது இந்தப் படத்தை வைத்து கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் மற்றொரு முயற்சியையும் யஷ் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, “ராமாயணா”வின் இரண்டு பாகங்களுக்குமான தென்னிந்திய விநியோக உரிமையை வாங்குவது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த முயற்சி எதிர்பார்த்தபடி கைகொடுத்தால் யஷுக்கு மிகப்பெரிய அளவில் பணவரவு கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே கவனம் பெற்றுள்ள இந்த பிரம்மாண்ட காவியம், இரு பாகங்களும் வசூலில் சாதனை படைத்தால் விநியோக உரிமை மூலமாக மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை யஷ் லாபமாக பெறக்கூடும் எனக் கூறப்படுகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ஸ்ரியா சரண், காஜல் அகர்வால் மற்றும் சன்னி தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் பாகம் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
—
