இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம், ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,எனக்கு ஓய்வு நேரம் கொடுத்தால் பாட்டு கேட்கமாட்டேன். ஒரு படம் பார்ப்பேன். என் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பேன். சென்னை புறநகரில் என் அம்மா நினைவிடம் இருக்கும் பண்ணை வீட்டுக்கு செல்வேன்’. இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
Add a Comment
