ஆதித்ய தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஹிந்தித் திரைப்படம் ‘துரந்தர்’. இப்படம் உலக அளவில் சுமார் 1400 கோடி வசூலித்தது. அதன் இரண்டாம் பாகம் கடந்த மாதம் வெளியாகி 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இந்தியத் திரைப்படங்கள் வெளியான சில மாதங்கள் கழித்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளியாவது வழக்கம். அது போல கடந்த வருடம் வெளியான ‘துரந்தர்’ முதல் பாகத்தை ஜப்பான் நாட்டில் வெளியிட உள்ளார்கள். ஜுலை 10ம் தேதி இப்படம் அங்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக ஜப்பான் மொழியில் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
Add a Comment
