தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகை ஷாலினி, நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “விஜய் மற்றும் அஜித் இருவருக்கிடையில் மிகவும் ஆரோக்கியமான மற்றும் நேர்மையான உறவு நிலவுகிறது. ஒருவரின் வெற்றிக்காக மற்றொருவர் மனமார மகிழ்வார்கள். அது மிகவும் அழகான மற்றும் பாராட்டத்தக்க உறவாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
திரையுலகில் போட்டி நிலவினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதையும் அன்பும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷாலினியின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டது.
