‘துரந்தர்’ படம் படைத்த 1000 கோடி வசூல் என்ற பிரம்மாண்டமான வெற்றியால் தனது அடுத்த படங்களின் வரிசையினை மாற்றியமைத்திருக்கிறார் ரன்வீர் சிங். ‘துரந்தர்’ படத்துக்குப் பிறகு ‘டான் 3’ படத்தில் நடிக்கவிருந்தார். தற்போது அதிலிருந்து விலகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவ்வளவு நாட்கள் நடைபெற்று வந்த முதற்கட்டப் பணிகள் அனைத்துமே வீண் எனவும் கூறப்படுகிறது. தற்போது ‘டான் 3’ படத்தின் புதிய நாயகன் யார் என்பதில் குழப்பம் நீடிக்கத் தொடங்கியிருக்கிறது.’டான் 3’ படத்துக்கு பதிலாக ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகும் ‘ப்ராளே’ படத்தில் நடிக்கவுள்ளார். அப்ளாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் ஜோம்பி வகை படம் என கூறப்படுகிறது.

