Saturday, September 14, 2024

ஹீரோவும் நானே… வில்லனும் நானே…என்றவாறு பிரபாஸ்-ஐ வைத்து அனிமல் பட இயக்குனர் போட்ட ஸ்கெட்ச்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸில் வசூல் குவித்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்க உள்ளார். 1000 கோடிக்கு மேல் வசூலித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தை முடித்த பிரபாஸ், தற்போது ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார்.

மாருதி இயக்கத்தில் உருவாகும் பிரபாஸின் ராஜா சாப் திரைப்படம், பிரபாஸை மீண்டும் சாக்லேட் பாய் ஹீரோவாகக் காட்ட உள்ளது. இது ஒரு ஹாரர் ரொமான்டிக் காமெடி படம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பல படங்களில் காணப்படாத அதிகமான பொழுதுபோக்கு அம்சங்கள் இதில் இருக்கின்றன என தெரிகிறது.

‘பாகுபலி’ போன்று டபுள் ரோலில் பிரபாஸ் நடித்தால் மீண்டும் ஒரு 1000 கோடி வசூல் நிச்சயம் என்கிறனர் ரசிகர்கள். ‘ஸ்பிரிட்’ படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதையும், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பருவத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், அவருக்கு வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

- Advertisement -

Read more

Local News