Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ராயனும் அமரனும் அருகருகே… சர்ச்சைக்கு இதுதான் முற்றுப்புள்ளியா? ட்ரெண்டிங் கிளிக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள “கொட்டுக்காளி” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது, “ஒருவரை நான் வளர்த்துவிட்டேன், என்னால்தான் அவர் வளர்ந்தார்” என்று யாரும் ஒருவரின் வளர்ச்சிக்கு முழுப் பெற்றோராக கருத முடியாது என்று, சூரிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், சிவகார்த்திகேயன் கூறிய இந்த பேச்சு நடிகர் தனுஷை நிச்சயமாக குறிக்கின்றது என்று சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கு காரணம், தனுஷ்தான் சிவகார்த்திகேயனை தனது “3” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பிறகு, “எதிர்நீச்சல்”, “காக்கிச்சட்டை” போன்ற படங்களை தயாரித்து, சிவகார்த்திகேயனுக்கு கமர்சியல் வெற்றியைக் கொண்டு வந்தார். பல இடங்களில் சிவகார்த்திகேயனும் தனுஷை பற்றி உயர்வாக பேசிக்கொண்டிருந்த நிலையில், அவர் இப்படி பேசியது சர்ச்சையை கிளப்பியது. “தானே மிகவும் வளர்ந்துவிட்டேன்; என்னுடைய வளர்ச்சிக்கு நான் திறமையானவன் தான் காரணம், மற்றவர்கள் அல்ல” என்று சிவகார்த்திகேயன் பேசினார் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்திய நிகழ்வொன்றில், தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒன்றாக கலந்து கொண்டு, இருவரும் அருகருகே நின்று நிகழ்வைக் கவனித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் அவர்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லையென்பது வெளிப்பட்டதால், கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News