Saturday, September 14, 2024

பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த வாழை… சிவகார்த்திகேயன் இயக்குனர் மாரி செல்வராஜூக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் “வாழை”. இப்படம் பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இதனால், நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் வாழை படத்தை புகழ்ந்து பேசியுள்ளார். “இந்த படம், நெருக்கமான ஒருவரின் கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மாரி செல்வராஜ் மீண்டும் ஒரு வலுவான இயக்குநராகத் தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். “வாழை” எனக்கு மிகவும் பிடித்த படமாக மாறியிருக்கிறது. இப்படம் பல விருதுகளை வெல்ல தகுதியுள்ள படம்” என்று அவர் பாராட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள செல்வராஜ், மிக நன்றி சிவகார்த்திகேயன், பரியேறும் பெருமாள் வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்கத் தொடங்கிய ஆன்மா நீங்கள். கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் வெளியானபோது முதல் ஆளாகக் கைபிடித்து கொண்டாடியதுபோல, வாழைக்கும் நீங்கள் கூறிய வார்த்தைகளைப் பாதுகாத்துக்கொள்கிறேன். நன்றி சகோ,” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News