Saturday, April 27, 2024

நாளை மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் அசத்திய ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நவீன தொழில்நுட்பத்தோடு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா திரைக்கதை ஒளிப்பதிவு என பலவற்றில் பல வளர்ச்சிகளை கண்டாலும், பழைய திரைப்படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் உண்டு.இப்படி சில திரைப்படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத வகையில் ரசிகர்கள் மனதில் இடம்பெறுவது உண்டு.

அந்த வகையில், ரசிகர்களால் புரட்சி நடிகராவும் மக்களால் இதய தெய்வமாக இன்று வரை கொண்டாடப்படும் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நடிப்பில் 1974 ஆம் ஆண்டு நவம்பர் 30ம் நாளில் வெளியான திரைப்படம் தான் ‘சிரித்து வாழ வேண்டும்.இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு வேடத்தில் இஸ்லாமியராகவும் எம்ஜிஆர் அசத்தி என இரட்டை வேடத்தில் அசத்தி இருந்தார்.இந்தப்படத்தில் நம்பியார், மனோகர், தேங்காய் சீனிவாசன் ஐசரி வேலன், எஸ்.வி.ராமதாஸ், வி.எஸ்.ராகவன் உட்பட பல தலைச்சிறந்த நடிகர்கள் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருப்பார்.கவிஞர் வாலி, புலமைப்பித்தன் ஆகியோரது வரிகள் மேலும் அழுகு ஊட்டி இருக்கும். இப்படத்தின் பாடல்களும் சரி இப்படமும் சரி அனைத்தும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

திரையில் ஓடிய இக்காவியம் ‘சிரித்து வாழ வேண்டும்’ தற்போது நாளை முதல்(27-04-2024) சென்னை ஆல்பர்ட் திரைஅரங்கில் தினசரி காட்சிகளாக திரையிடப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News