Tuesday, September 17, 2024

நழுவும் நடிகர்கள் அப்செட்டான ஜெய்சன் சஞ்சய்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய்யின் மகன் என்பதால், அவரது மகன் சஞ்சயும் நடிகராவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் திடீரென இயக்குனராக மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதற்கிடையே, லைக்கா நிறுவனம் சஞ்சயின் படத்தை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்ததும், ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகமே ஆச்சிரியத்தில் ஆழ்ந்தார்கள்.

சஞ்சய் லண்டனில் சினிமா இயக்கம் குறித்து படித்து, நண்பர்களுடன் சில குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அவரை நடிக்க அழைத்தும், சஞ்சய் அதில் ஆர்வமில்லை என தெரிவித்தார்.அவரின் ஒரே ஆசை இயக்குனராக மாறுவதுதான்.சஞ்சய் லைக்கா தயாரிப்பில் படம் இயக்குகிறார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால், அப்படத்தின் அப்டேட் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.கவினிடம் கதை சொல்லி இருக்கிறார், துல்கர் சல்மான் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தால், கவின் அதை மறுத்தார் என சொல்லப்படுகிறது.

கவின் மற்றும் துல்கர் சல்மான் போன்ற நடிகர்களிடம் ஜேசன் தனது கதை பகிர்ந்தது உண்மைதான்.ஆனால், அவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ஜேசனிடம் பதிலில்லாததால், மேலும், அவரது இயக்கத்தில் பெரிய அனுபவம் இல்லாததால், யாரும் அவரது இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை என்பதுதான் உண்மை என பேசப்படுகிறது.

மேலும், ஜேசன் தனது படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க ரஆசைப்பட்டதாகவும் ஆனால் அவர் அதை ஏற்கவில்லை என்றும் சொல்லப்பட்ட நிலையில் ஜேசன், ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீனை இசையமைக்க வைக்க விரும்புவதாகவும் அதேபோல், ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் அவராக இதில் நடிக்க ஆர்வமாக உள்ளார் எனவும் தகவல் உலவுகிறது.ஆனால், இவரின் இயக்கத்தில் பிரபல நடிகர்கள் ஆர்வம் காட்டாததால், படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும், படத்திற்கு ஆலோசனை கொடுக்க லைக்கா தயாரிப்பில் சூப்பர்வைசரை நியமித்தது ஜேசன் சஞ்சய்க்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News