குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். சமீபத்தில் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் வெளியானது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாகவும் ரூ. 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடியது.
இரண்டு வெற்றி படங்களுக்குப் பிறகு, நித்திலன் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நயன்தாராவை வைத்து அடுத்த படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது நித்திலன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும், அந்த கதை தனுஷிற்கு பிடித்ததாகவும், இது அடுத்த கட்டத்திற்கு நகர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
