Saturday, September 21, 2024

தனுஷின் ‘இட்லி கடை’ ஆக்ஷன் படமா? ஃபீல் குட் படமா? #idli Kadai

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ், ‘ராயன்’ படத்தை தொடர்ந்து இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘இட்லி கடை’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ், ஒளிப்பதிவாளராக கிரண் கௌசிக், தயாரிப்புத் திட்டக் கலைஞராக ஜாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. படத்தில் அருண் விஜய் வில்லனாகவும், அசோக் செல்வன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் நித்யாமேனன் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் 52வது படமாக உருவாகி வரும் ‘இட்லி கடை’ படப்பிடிப்பு தேனி பகுதியில் நடைபெற்று வருகிறது. படத்தில் ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் இணைந்துள்ளனர். தற்போது, ராஜ்கிரண், தனுஷ், நித்யாமேனன் ஆகியோர் கலந்து கொண்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும், அருண் விஜய் வில்லனாகவும், அசோக் செல்வன் தனுஷின் தம்பியாகவும் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களது காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என தகவல்.

தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவின் ஊர் தேனி என்பதால், அந்த பகுதியில் உள்ள மக்கள் தனுஷிற்கு சிறப்பான ஆதரவு வழங்கி வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். ஜாக்கியின் கைவண்ணத்தில் தேனி பகுதியில் கடைத்தெருக்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ‘ராயன்’ படத்தில் வன்முறையும், ரத்தமும் பயமுறுத்திய நிலையில், ‘இட்லி கடை’ படம் ஃபீல்குட் கதையாக உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது. ‘திருச்சிற்றம்பலம்’ போல ஒரு அழகான படமாக இது உருவாகி வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News