நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பை சந்தோஷ் நாராயணன் மேற்க்கொள்கிறார்.

தற்போது, இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பின் முதல்கட்டம், வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அந்தமான் தீவில் தொடங்க உள்ளது.

இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், வில்லன் கதாபாத்திரத்தை இயக்குனர் மற்றும் நடிகர் விஜயகுமார் ஏற்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.