Tuesday, October 1, 2024

கமல்ஹாசன் மற்றும் சல்மான்கான்-ஐ வைத்து அட்லி புதிய படத்தை இயக்குவது உறுதியானதா? வெளியான முக்கிய அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா ஆகிய முன்னணி நடிகர்கள் நடித்த இப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர், விஜய்யுடன் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய மூன்று வெற்றிப் படங்களையும் இயக்கினார். இவற்றை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். 2023-ம் ஆண்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை இயக்கியதன் மூலம், அட்லீ இந்திய சினிமாவில் மேலும் உயரமானார். இந்தப் படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர்.

இப்போது, அட்லீ தனது ஆறாவது படத்தில் இந்தியாவின் இரண்டு பிரபல சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கமல் ஹாசனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது, மற்றும் பெயரிடப்படாத இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனிருத் இப்படத்துக்கும் இசையமைக்க உள்ளார்.

கமல்ஹாசன் தற்போது இளம் இயக்குநர்களுடன் இணைந்து பான் இந்தியா படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சல்மான்கான்-ஐ வைத்து அட்லீ ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் எனவும் அப்படத்தில் கமல்ஹாசனும் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. இதற்கிடையில் கிட்டத்தட்ட இந்த கூட்டணி உறுதியாகிவிட்டது எனவும் டூயல் ஹீரோ கதை எனவும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News