Tuesday, November 19, 2024

இப்படத்தில் நாங்கள் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கால மனிதர்களைப்போலவே மாறினோம் – நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தங்கலான் வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.நடிகர் விக்ரம் பா. இரஞ்சித் கூட்டணியி உருவான தங்கலான் திரைப்படம் ஆக.15 ஆ தேதி திரையரங்குகளில் வெளியானது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலு விஎஃப்எக்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.மேலும், இப்படம் உலகளவில் ரூ. 70 கோடிக்கு அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று (ஆக.19) தங்கலா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், பேசிய நடிகர் விக்ரம், “பா. இரஞ்சித் என்னை சந்திக்கும்போது என் தலை முடியை வெட்ட வேண்டும் என்றார். நான் சரி என்றேன். கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டு, ‘கோமணமும்’ கட்ட வேண்டும் என்றார். கொஞ்சம் பயமாக இருந்தாலும் எனக்கு சரியாக வந்தால் நன்றாக இருக்கும் என ஒப்புக்கொண்டேன். இரஞ்சித் இல்லையென்றால் என்னால் இக்கதாபாத்திரத்தை செய்திருக்கவே முடியாது. அவர் என்னை ஆதாமாக (நிர்வாணமாக) நடிக்க சொன்னாலும் நடிப்பேன்.

இப்படத்தில் நாங்கள் யாரும் நடிக்கவில்லை. அந்தக் கால மனிதர்களைப்போலவே மாறினோம். பாம்பும், தேளும் ஊரும் நிலத்தில் கபடி விளையாடி, போராடி, தங்கம் வென்ற கதையே தங்கலான். உண்மையும், ஆழ்ந்த சிந்தனையும் கொண்ட இப்படத்தில் என்னை நடிக்க வைத்தற்காக இரஞ்சித்தை என்றும் மறக்க மாட்டேன். படக்குழுவினருக்கு அனைவருக்கும் என் நன்றிகள் என்றார்.

- Advertisement -

Read more

Local News