தமிழில் `களரி’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தின் மூலம்தான் அதிகளவில் கவனம் பெற்றார். அதன் பிறகு கடந்த 2023- ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘விருபாக்ஷா’ படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார். தற்போது பாலிவுட்டில் கால்பதித்திருக்கிறார். ‘மஹாராக்னி’ படத்தில் நடிக்க இருக்கிறார். சரண்தேஜ் இப்படத்தை இயக்குகிறார். தற்போது எல்லாம் நடிகை சம்யுக்தா கிளாமர் புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இதில், 27 வருடங்களுக்குப் பிறகு பிரபு தேவாவும், கஜோலும் இணைந்து நடிக்கின்றனர். நசுருதீன் ஷா, ஜிஷு சென் குப்தா, சாயா கதம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் பாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து பேசிய சம்யுக்தா, “நான் கேரளாவைச் சேர்ந்தவள்தான். ஆனால் தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறேன். மொழி தடைகள் எல்லாம் மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மொழி கடந்து படங்களைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.


தெலுங்கு நடிகர்கள் இந்தியிலும், இந்தி நடிகர்கள் மற்ற மொழிகளிலும் நடிக்கிறார்கள். பாலிவுட்டிற்கு வரும்போது உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அங்கு ஆரோக்கியமான போட்டி அதிகம் இருக்கிறது. இந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது.

அங்கு ஆரோக்கியமான போட்டி அதிகம் இருக்கிறது. இந்தி சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்குமான இடைவெளி குறைந்து வருகிறது. ‘மஹாராக்னி’ படத்தில் கஜோலின் தங்கையாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்சியமாக இருக்கும். ஆக்ஷன், பாடல்கள் என இப்படத்தில் அனைத்தும் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.