காமெடியனாக சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் சூரி, தற்போது நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அளவில் நாயகனாக சூரியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.
விடுதலை படத்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக சூரி நடிப்பில் வெளியான கருடன் படமும் நாயகனாக அவரது நடிப்பில் வெளியாகி மிரட்டலாக அமைந்தது. சூப்பர் ஹிட் படமாக மாறியது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார் சூரி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

கொட்டுக்காளி படம் தொடர்ந்து சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் கொட்டுக்காளி படம் திரையிட தேர்வாகி இருந்தது. ஒரு தமிழ் படம் இந்த கௌரவத்தை பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்பட்டுள்ளது. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ள பிஎஸ் வினோத் ராஜ் தற்போது கொட்டுக்காளி படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.