முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் திருமணம் வரும் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, எஸ்.பி.வேலுமணியும் அவரது குடும்பத்தினரும் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அவரது இல்ல திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, இன்று எஸ்.பி.வேலுமணி நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின் போது, எஸ்.பி.வேலுமணியின் குடும்பத்தினரும் அவருடன் இணைந்து இருந்தனர்.

திருமண அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ரஜினி, எஸ்.பி.வேலுமணியின் குடும்பத்தினருடன் சில நேரம் உற்சாகமாக உரையாடினார். அதன் பிறகு, அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.