Wednesday, September 25, 2024

சூர்யா 44 படத்தில் தனக்குரிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! #SURIYA44

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் ‛முகமூடி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், விஜய் நடித்த ‛பீஸ்ட்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஆதரையை பெற்றார்.

சமீபத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்ததால், சினிமாவில் இருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்திருந்தார். தற்போது, சூர்யாவின் 44வது படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் மீண்டும் குறுவட்டத்துக்குள் வந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஜூன் மாதம் அந்தமானில் தொடங்கி, அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும் கூறப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பை முடித்ததாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

Read more

Local News