Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது – நடிகர் ஷாருக்கான் புகழாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும், பாலிவுட்டின் பிரபல நடிகருமாவார். கடந்த ஆண்டு வெளியான அவரது “பதான்” மற்றும் “ஜவான்” படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்ததுடன், உலகளாவிய பார்வையாளர்களின் பெரும் கவனத்தையும் பெற்றன.

இந்த நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. அந்த விழாவில், அவர் நடித்த “தேவதாஸ்” திரைப்படம் திரையிடப்பட்டது. அதன்பின், ஷாருக்கானுடன் ரசிகர்கள் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது, பாலிவுட் சினிமாவுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் இடையே உள்ள நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். முதலில், அவர் இந்திய சினிமாவின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் பற்றிக் குறிப்பிட்டார். தென்னிந்திய சினிமாவின் புத்திசாலித்தனத்தையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், கதைகளின் சிறப்பையும் பாராட்டினார்.

மேலும், “சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது” என்று அவர் கூறினார். “ஜவான்”, “ஆர்ஆர்ஆர்”, “பாகுபலி” போன்ற சமீபத்திய பிளாக்பஸ்டர் படங்கள் உலகளாவிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தென்னிந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட பாணி இருப்பதாகவும், அதை அவர் மிகவும் ரசித்ததாகவும், அது தனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்ததாகவும் அவர் பாராட்டி கூறினார்.

- Advertisement -

Read more

Local News