Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

டிகரும் இயக்குனருமான சுந்தர் சியின் அரண்மனை 4 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசானது. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசானதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பட குழுவினர் தொடர்ந்து பல விதங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர்.

அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு முன்னதாக வெளியான அரண்மனை 1 மற்றும் 2 படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது பின்னர்‌ அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி சற்று சுமாரான வரவேற்பைப் தான் பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் ரிலீசாகி‌ இருக்கிறது.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.என்று இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ஒன்றில் பேசிய சுந்தர் சி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா கதை குறித்து பேசி உள்ளார்.

இப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியிலேயே துவங்கவுள்ளதாக சுந்தர் சி பேசியுள்ளர். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகுள்ள இந்த கதைக்களத்தில்இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News