தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா, “நேஷனல் கிரஷ்” என்று ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் அழைக்கப்படும் அளவுக்கு புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு வெளியான “அனிமல்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமானார்.

நடிப்பின் மூலம் மட்டுமல்ல, தனது க்யூட்டான செயல்பாடுகளாலும் ரசிகர்களுடன் மிகுந்த நேர்மையுடன் பழகுவதாலும், ராஷ்மிகாவின் ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ள, அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். மேலும், ரசிகர்களை மகிழ்விக்க, தனது சோசியல் மீடியா பக்கத்தில் சில வீடியோக்களையும் வெளியிடுகிறார். சமீபத்தில், ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், அவர் தனது தாய் மொழியான கொடவா பாஷையில் பேசினார். கர்நாடகாவில் குடகு மலைப்பகுதியில் உள்ள கூர்க் பகுதிக்காரர் தான் ராஷ்மிகா. இந்த பாஷையை புரியாத பலரும், இது என்ன மொழி, எந்த ஊர் மொழி என்று குழப்பத்துடன் கமெண்ட்களை எழுதினர்.
இதற்கு விளக்கமாக, ராஷ்மிகா கூறியதாவது: “நீங்கள் அனைவரும் குழம்பி விட்டீர்கள் என்று தெரிகிறது. இது என்னுடைய தாய் மொழியான கொடவா பாஷை. குடகு பகுதியில் தான் நான் பிறந்து வளர்ந்தேன். என் வாழ்க்கை முழுவதும் கொடவா பாஷையை பேசிக் கொண்டிருப்பேன். பேசும்போது எவ்வளவு அழகாக ஒலிக்கிறது பாருங்கள்” என்றார்.