நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ராதிகா இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், எதற்காக இப்படி இவர்களுள் வழக்கு என்று பார்க்கும்போது, இந்த விஷயம் ரொம்பவே சற்று சட்ட சிக்கலாக உள்ளது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/06/1000008558-edited.jpg)
அதாவது சென்னை தி.நகரில் உள்ள ராஜமன்னார் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தனுஷின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அதே அப்பார்ட்மெண்டில் சரத்குமார் மற்றும் ராதிகா வசித்து வருக்கின்றனர்.இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பொது மேல் தளத்தை சரத்குமார் மற்றும் அவரை சேர்ந்தவர்கள், மற்ற குடியிருப்பு வாசிகளை பயன்படுத்த விடாமல் தடுக்கின்றனர் எனவும் அதே போன்று, கீழே உள்ள பொது தளத்தையும், தனது நிறுவனத்தின் வேலைகளுக்காக வணிக ரீதியாக சரத்குமார் பயன்படுத்தி வருகின்றார் எனவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/06/1000008557-edited.jpg)
இதனால், தனுஷின் தாயார் மற்றும் சில குடியிருப்பு வாசிகள் இணைந்து, சென்னை ஐகோர்ட்டில் சரத்குமாருக்கு எதிராக வழக்கு கொடுத்துள்ளனர்.கடந்த ஜூன் மாதம் ஐந்தாம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. தற்போது சரத்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி இந்த வழக்கில் பதில் சொல்லவேண்டும் என ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எப்படியோ கடைசியில் இப்பிரச்சினை சுமுகமாக பேசி தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.