Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விக்னேஷ் சிவனுடன் ஆன்மிக பயணம் சென்ற நயன்தாரா! ட்ரெண்ட் புகைப்படங்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் அவர்களுக்கு சிறப்பு வழிபாடுகளை ஏற்பாடு செய்திருந்தது. நயன்தாரா கோவிலுக்கு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள், அவரை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். 2022ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகிய நயன்தாரா, குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் மற்றும் உலக் தெய்வேக் என் சிவன் எனப் பெயர் சூட்டியிருந்தார்.

தற்போது நடிகை நயன்தாரா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், நேற்று தனது கணவருடன் பகவதியம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதன்பின், சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில் மற்றும் சாமி தோப்பு தலைமை பதிக்கும் இடத்திற்கும் கணவருடன் சென்று தரிசனம் செய்தார்.

‘மூக்குத்தி அம்மன்’ படம் வெளியான பிறகு, நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் கன்னிபகவதியம்மன் கோயில் திருவிழாவின் போது வந்து பகவதியம்மனை வழிபடுகிறார்.இதனையடுத்து,திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வழிபாடு செய்தார். கோவில் நிர்வாகத்தினர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். நயன்தாரா கோவிலுக்கு வந்த செய்தி அப்பகுதியினருக்கு தெரியவந்ததும், கோவிலுக்கு வெளியே நயன்தாராவை காண ரசிகர்கள் கூட்டமாக காத்திருந்து செல்பி எடுத்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News