Saturday, September 14, 2024

மீண்டும் மலர்ந்த நினைவுகள்… மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்த அபிராமி! #ThugLife

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் , சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகும் படம் “தக் லைஃப்”. சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. விருமாண்டி படத்திற்கு பிறகு, கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து அபிராமி நடிக்கிறார். அவர் நடிப்பில் வெளியான மகாராஜா படம் சமீபத்தில் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

நீண்டகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அபிராமி, தற்போது முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். மகாராஜா படத்தின் ப்ரமோஷன்களில் ஈடுபட்டிருந்த அவர், தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் நடிப்பதைப் பற்றியும், தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். விருமாண்டி படத்தில் முதல் காட்சியில் தங்களைச் சுற்றி மாடுகள் இருந்ததாகவும், தற்போது தக் லைஃப் படத்திலும் அதேபோல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி கமல்ஹாசனிடம் கூறியபோது, அவர் சிரித்ததாக அபிராமி கூறியுள்ளார். நீண்டகாலங்களுக்கு பிறகு நடிக்கும்போது, கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இருந்ததால் பதற்றம் இருந்ததாகவும், ஆனால் அந்த தருணத்தை ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மணிரத்னத்திடம் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் அபிராமி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News