2022-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருதை பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு அறிவித்துள்ளதுஅக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விருது விழாவில் அவர் இந்த உயரிய விருதைப் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.
1976 ஆம் ஆண்டிலிருந்து மிதுன் சக்ரவர்த்தி பாலிவுட்டில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். தனது முதல் படத்திலேயே மிதுன் சக்ரவர்த்தி தேசிய விருதைப் பெற்றார். தமிழிலும் ‘யாகவாராயிணும் நா காக்க’ என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். 48 ஆண்டுகளாக பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் மிதுன் சக்ரவர்த்தியின் சினிமாவுக்கான அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக இந்த உயரிய விருது அவருக்குக் கிடைத்துள்ளதாம்.