Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கொட்டுக்காளி படத்தைப் பார்த்த பின் எனக்கு பேய் பிடித்துவிட்டது… நெகிழ்ச்சியோடு பகிர்ந்த இயக்குனர் மிஷ்கின்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, பாராட்டுகள் மற்றும் விருதுகளை வென்றுள்ளது. இதை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார், மேலும் இப்படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாவதாக இருக்கிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது, அதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.

அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட விழாவில் தான் வினோத் ராஜை சந்தித்தேன். படத்திற்கான இசையமைப்பாளர் யார் என அவரிடம் கேட்டேன். அவன் யாருமில்லை என்றான், அதற்கு எனக்குள் அவனைப் பற்றி சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த பிறகு, வினோத் என்னை நேராக செருப்பால் அடித்ததாக உணர்ந்தேன்.

சமீபத்தில் நான் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று ‘வாழை’. அதைப் பார்த்த பின் ஒரு வாரம் தூக்கமே வரவில்லை. மற்றொன்று ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தைப் பார்த்த பின் எனக்கு கிட்டத்தட்ட பேய் பிடித்துவிட்டது போல இருந்தது. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது பொறுப்பாக இருக்கிறது. இதைப் பார்ப்பதற்காக நான் நிர்வாணமாக கூட ஆடுவேன், ஏனெனில் சினிமா பார்க்க வருவதே இதற்காக அல்லவா? இன்றைக்கு ’16 வயதினிலே’ மாதிரியான படங்களை எடுத்தால் பார்ப்பார்களா என எனக்குத் தெரியவில்லை. இந்தப் படம் எனக்கு என் தாயின் கருவறை, என் மகளின் யோனியைப் போலத் தெரிகிறது. இளையராஜாவிற்குப் பிறகு வினோத் காலில் நான் முத்தமிடுவேன்” என்று பேசினார்.

- Advertisement -

Read more

Local News