நடிகை யாஷிகா ஆனந்த் சினிமாவில் தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிசியாக இருக்கிறார். திரை துறையில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதில் உறுதியாக இருக்கும் இவர், ரசிகர்களை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அதிக கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.


துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர், அந்த படத்தைத் தொடர்ந்து கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் காவ்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முப்பதி வருட காலத்திற்கு பிறகு, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.


சமூக வலைத்தளங்களில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த், தற்போது ரசிகர்களை வளைத்துப்போட பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் இவ்வளவு ஹோம்லியா மாறிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.