Saturday, September 21, 2024

என்ன நயன் இதெல்லாம்? நயன்தாராவின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா, அவருடைய கணவர் விக்னேஷ் சிவன், மற்றும் அவருடைய இரட்டைக் குழந்தைகள் உயிர் மற்றும் உலகோடு ஹாங்காங்கில் கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். ஹாங்காங் சுற்றுப்பயணத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.

நயன்தாராவின் ஹாங்காங் பயணம் பற்றி தகவல் ஒன்று உலாவுகிறது.அதில் கோடை விடுமுறையை கழிக்க தனது குடும்பத்துடன் ஹாங்காங் சென்றுள்ள நயன் மற்றும் விக்னேஷ் தம்பதியினர் குழந்தைகளை கவனித்துக் கொள்ள மூன்று நர்சுகளை அதாவது செவிலியர்களை அழைத்துச் சென்றுள்ளனராம். குழந்தைகளை கவனிப்பதற்காக மட்டுமே இந்த மூன்று செவிலியர்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதி அழைத்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த தகவல் சில நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில நெட்டிசன்கள், குழந்தையை தான் வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டீர்கள் உங்களால் குழந்தை கூட பார்த்துக் கொள்ள முடியாதா இதற்கு தனியாக நர்சுகள் தேவையா எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News