Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Tuesday, March 11, 2025

Touring Talkies

‛உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?’ என்று கேட்கும் அளவிற்கு குறைவான நேரமே தூங்கினேன்… ஏ.ஆர்.எம் படம் குறித்து கீர்த்தி ஷெட்டி டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் ‛உப்பென்னா’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்த கிர்த்தி ஷெட்டி, தற்போது தமிழிலும் கவனம் செலுத்தி, ‛வா வாத்தியார்’, ‛லைப் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‛ஜீனி’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல, மலையாளத்தில் ‛அஜயண்டே ரெண்டாம் மோசனம்’ எனும் பீரியட் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜிதின் லால் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கிர்த்தி ஷெட்டி கூறும்போது, “மூன்று காலகட்டங்களில் நடக்கும் விதமாக இந்த கதையை உருவாக்கியதும், அதில் என்னுடைய கதாபாத்திரத்தை அழகாக வடிவமைத்திருப்பதும் என்னை ஈர்த்தது. இதில் பக்கா மலையாள கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். மற்ற மொழிகளை விட மலையாளத்தில் தினசரி படப்பிடிப்பு நேரம் அதிகம். ஒரு கட்டத்தில் ஐ ப்ரோ பயன்படுத்த முடியாமல் போனது. பலரும் ‛உனக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?’ என்று கேட்கும் அளவிற்கு குறைவான நேரமே தூங்கினேன். 

ஆனால் என்னை விட அதிக நாட்கள் இந்த படத்தில் நடித்த நாயகன் டொவினோ தாமஸ், எந்தவித களைப்பும் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக நடித்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>