Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

இந்த படத்த பார்த்துட்டு எட்டு மணி நேரம் நானும் மிஷ்கினும் பேசினோம் – விஜய் சேதுபதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளிவந்த “மகாராஜா” அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. தன்னுடைய 25வது படமான “சீதக்காதி”யில் நடித்தது போலவே இது உள்ளது என்றும், 50 படங்களை நிறைவு செய்துவிட்டதாகவும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். “மகாராஜா” படத்திற்காக அதிகமான பேட்டிகளை கொடுத்த விஜய் சேதுபதி, ஒரு பேட்டியில் இயக்குனர் மிஷ்கின் பற்றியும் பல கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மிஷ்கினுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது தன்னுடைய பெருமையாகக் கூறியுள்ள அவர், மிஷ்கின் தன்னுக்காக “ட்ரெயின்” படத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.ஆனால், அந்தப் படத்தை அவர் எழுதி முடிப்பதுவரை காத்திருக்க முடியாததால், “பிசாசு 2” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அந்த படத்தில் மூன்று காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார், இரு நாட்களில் நடித்து முடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவிருப்பதாக தெரிகிறது. இதன் உடனே, மிஷ்கின் இயக்கத்தில் “ட்ரெயின்” படத்திலும் நடித்து வருகிறார்.

மிஷ்கின் “சைக்கோ” படத்தை நீண்ட நாட்கள் பார்க்காமல் தள்ளிப்போட்டதாகவும், மிஷ்கினை நேரில் சந்தித்தபோது இது குறித்து கூறிவிட்டதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.”சைக்கோ” படத்தை பார்த்ததும் அதன் கதையால் மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும், மிஷ்கினை நேரில் சந்தித்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பேசிப் புரிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தன்னுடைய கையில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்சை மிஷ்கின் தன்னுக்குப் பரிசாக அளித்ததாகவும் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஒரு படத்தை பார்த்ததற்காக வாட்ச் பரிசாக கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். “ட்ரெயின்” படம் மிகச் சிறப்பாக உருவாகி வருவதாகவும் சில காட்சிகளை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News