அஞ்சாமை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலும், நீட் தேர்வை தடுக்கும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் காட்சிகள் உள்ளதென, இப்படத்தை தடை செய்து, இயக்குனர், நடிகர்கள், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது திரையுலகில் பரபரப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
