நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான கே.ஜி.எப் 1 மற்றும் கே.ஜி.எப் 2 போன்ற திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உயர்ந்தவர். இந்த இரு படங்களும் வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தன. இவற்றின் வெற்றியை தொடர்ந்து தற்போது யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.