Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

பில்லா படம் போன்று மீண்டும் அஜித் மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்க ஆசை – இயக்குனர் விஷ்ணுவர்தன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள சமீபத்திய திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறவர் நடிகர் முரளியின் இளைய மகன் மற்றும் அதர்வாவின் சகோதரரான ஆகாஷ் முரளி. கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரபு, குஷ்பு ஆகியோர் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா.

இந்த படத்தின் முதல் தோற்றத்தை நடிகை நயன்தாரா வெளியிட்டார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளது.இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் பேசுகையில், ஆகாஷ் மற்றும் சினேகா இருவரும் தங்களை முதன்முதலில் சந்தித்தபோது, நான் பாலிவுட்டில் ‘ஷெர்ஷா’ படத்தை இயக்கி கொண்டிருந்தேன். அதன் பின்னர் இந்த படத்தை இயக்க முடிவு செய்தேன். நேரில் காணும் ஆகாஷ் மற்றும் திரையில் காணும் ஆகாஷ், இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவர் முதல் படமாகச் சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். படத்தில் ஆகாஷ் மற்றும் அதிதி ஷங்கரின் கெமிஸ்ட்ரி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

இது முழுக்க முழுக்க ஒரு காதல் டிராமா படம். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் ஜோடி புத்துணர்ச்சியுடன் திரையில் தோன்றுகின்றனர். நேசிப்பாயா ஒரு ரொமான்டிக் ஆக்ஷன் படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன் என்றார்.அதனைத் தொடர்ந்து, நெருக்கமான நண்பர்கள் அஜித் மற்றும் நயன்தாரா இருவரையும் வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளீர்களா என்று கேட்டபோது, “நான் இருவரையும் சேர்த்து ‘பில்லா’ படத்தை கொடுத்தேன். அதேபோல் ஒரு படத்தில் இருவரையும் மீண்டும் சேர்த்து நடிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. விரைவில் அது நடக்கும்” என்று அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News