நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் வடசென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இப்படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம். விரைவில் இப்படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.