தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, ஹிந்தியிலும் நடிக்க வேண்டும் என்ற நோக்கில் மும்பை சென்றது, மனைவி ஜோதிகாவின் ஆலோசனையைப் பின்பற்றியே என கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. தற்போது நடிகர் சூர்யா சிவா இயக்கத்தில் கங்குவா பட்சத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது சூர்யா 44 படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்நிலையில் சூர்யா அவர் மும்பை சென்ற பிறகு, பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் “கர்ணா” என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த தகவல் சுற்றி வந்தாலும், அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், இப்படம் குறித்து ஓம்பிரகாஷ் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். “கர்ணா” படத்தில் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, அது முடிந்தவுடன் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.