பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து 2021ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ என்பது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தன.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் மற்றும் ஜீ ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், சார்பட்டா பரம்பரை 2 குறித்த புது தகவலை பகிர்ந்தார். அதாவது, தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் ‘வேட்டுவம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன் பணிகள் முடிந்ததும், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.