Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலக காரணம் என்ன? மனம் திறந்த‌ இயக்குனர் பாலா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் பாலா, அருண் விஜய்யுடன் இணைந்து “வணங்கான்” எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதுடன், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் டீசரும் டிரெய்லரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வைரலானது. படத்திற்கான யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. “வணங்கான்” திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில், இப்படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். இதுகுறித்து, இயக்குனர் பாலா, “வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகவில்லை. கன்னியாகுமரியில் நேரடியாக படப்பிடிப்பு நடத்தினோம், அப்போது சூர்யாவை பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டதால் பணிகள் கஷ்டமானது. எனவே, இருவரும் ஆலோசித்து அவர் விலக முடிவு செய்தோம். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. நான் தனிப்பட்ட முறையில் தவறு செய்தாலும் அதை சூர்யா கேட்கும் உரிமை உடையவர்,” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News