இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. சமீபத்திய தகவலின்படி, இந்த படத்தின் வேலைகளுக்காக அல்லு அர்ஜுன் தொடர்ந்து 3 மாதங்கள் மும்பையில் தங்கி முழுமையாக ஈடுபட உள்ளார். அடுத்து, விஎப்எக்ஸ் காட்சிகளை படமாக்கும் பணிக்காக அவர் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற மிகப்பெரிய ஹிட் படத்திற்கு பிறகு, அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைவது திரையுலகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் இந்த புதிய படத்தில் முழு நேரமாக செயல்பட்டு வருகிறார்.
அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ இணையும் முதல் படமாக இது உருவாகும் காரணத்தால், இதன் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கின்றது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரமாக நடிக்கிறார் என்பதும் இந்தப் படத்திற்கு மேலும் பெரும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.