உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் பல்வேறு மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றிருக்கும் ஏ.ஆர். ரகுமான், அளிக்கும் நேர்காணல்களில் எப்போதும் சுவாரசியமான பதில்களை கூறுவது வழக்கம். சமீபத்திய ஒரு நேர்காணலில், அவரை ரசிகர்கள் “பெரிய பாய்” என்று அழைப்பது தான் பிடிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், “பெரிய பாய் என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. அதென்ன பெரிய பாய், சின்ன பாய்? நான் என்ன கசாப்புக் கடை வைத்திருக்கிறேனா?” என்று நகைச்சுவையாக கூறினார். அவரை ரசிகர்கள் “பெரிய பாய்” என்றும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை “சின்ன பாய்” என்றும் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.