நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்’. இந்தப் படத்தை ‘விலங்கு’ வெப் சீரிஸின் மூலம் கவனம் பெற்ற பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற மே 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மேலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்களுடன் ‘லப்பர் பந்து’ புகழ் ஸ்வாஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர், மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். ‘கருடன்’ படத்தை உருவாக்கிய லார்க் ஸ்டூடியோ இப்படத்தையும் தயாரித்துள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் கூறியதாவது: “விலங்கு தொடரில் கொலை, ரத்தம், திகில் ஆகியன இருந்தன. ஆனால், அந்த வகையைவிட்டுப் பூடாக வேறு ஒரு உணர்ச்சி சார்ந்த விஷயத்திற்கு செல்வது தான் இந்த ‘மாமன்’ படம். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து, அக்கறையுடன் வாழ்ந்து வருகிறோம். உதவியும், அதைத் திருப்பி கொடுப்பதுமான வாழ்க்கையை நாமெல்லாம் கடைபிடிக்கிறோம். அந்த உறவுகள் பற்றியும் சினிமாவிலும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த படமும் அதே நோக்கில் தயாரிக்கப்பட்டது. ஒரு 6 வயது சிறுவனின் வாழ்க்கையை மையமாக கொண்டு, உறவுகளில் காணப்படும் நெருக்கத்தையும், அதிலுள்ள சிரிப்பையும், கோபத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தியுள்ளேன்.”
“இந்த படத்திற்கான கரு, சூரிக்கு சொன்ன கதையின் அடிப்படையில் உருவானது. உண்மையான சம்பவமும் இதன் பின்னணி. இதில் யாரும் நேரடி வில்லன்கள் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் பக்கத்திலிருந்து நியாயத்தை சொல்லி செல்கிறார்கள். உறவுகள் செய்யும் தவறுகள் பெரும்பாலும் நமக்குத் தெரியாமலே நடக்கிறது. பல பிரச்சனைகள் புரிந்துகொள்ளாததால்தான் உருவாகின்றன. இந்த உலகத்தில் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. அதனால்தான் கிராமத்து வாழ்க்கையும், மனிதர்களின் உணர்வுகளும் அடங்கிய படமாக இதை உருவாக்க முயற்சி செய்துள்ளேன்.”
“சூரியின் கதாபாத்திரம், அவன் அக்கா மகனை நேசிக்கிற பாசமும், பழகியவளிடம் கொண்ட காதலும், இரண்டுக்கும் இடையே அவன் நடக்கும் மனதளவான தடுமாற்றமும் இந்தக் கதையில் பிரதிபலிக்கிறது. இப்படியான ஒரு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பும் தருணங்களாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. ‘மாமன்’ படத்தை பார்க்கும் போது நம் உறவுகள் அனைவரும் நினைவுக்கு வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.